முகப்பு


 பிரசாந்தி நிகழ்வுகள்


 சாயி அவதாரம்


 
போதனைகள்


 இலங்கையில் சாயி


 அனுபவங்கள்


 சாயி நிலையங்கள்


 சஞ்சிகைகள்


 
வெளியீடுகள்


 பொது நிகழ்வுகள்

 
பதிவிறக்கங்கள்

 படங்கள்

 உங்கள் பக்கம்

 தொடர்புகளுக்க

 

உங்கள் ஆக்கங்களை எமக்கு அனுப்பி வைத்தால் நாம் இப்பகுதியில் இணைத்துக் கொள்வோம்.
 

ஆக்கங்களை அனுப்ப
 

கவிதை
 


 

 

 

விடுமுறை

பள்ளிக்குத் தானே விடுமுறை - உன்
படிப்புக்கு ஏது விடுமுறை
உன்னிடம் அன்பாய்ச் சொல்கிறேன்
நீ சிந்தித்துப் பாரு ஒருமுறை

சோம்பிப் படுப்பது ஓய்வன்று
வேலையில் மாற்றமே ஓய்வாகும்
ஏட்டுப்படிப்பில் ஓய்வெடுத்து
செயல்முறை அறிவைய் வளர்த்திடுவாய்

அநுபவப் பாடம் உலகதனில்
அவசியம் நீயும் பெற்றிடணும்
நுட்பங்கள் பலவற்றைக் கற்றிட்டு
நுண்ணிய அறிவை வளர்த்திடனும்

ஆதவன் போன்று அனுதினமும்
மாதா கடமை செய்கையிலே
ஓயாமல் உழைக்கும் தந்தையுமே
மக்களை முன்னேற்றத் துடிக்கிறார்

தரமான கல்வி பெற்றிடவும் - உயர்
தரமான வாழ்வு வாழ்;ந்திடவும்
மாதா பிதா குரு படும்பாட்டை
மகனே நீயும் உணராயோ

நாளும் பொழுதும் முயன்று நீ
முழுமையான கல்வி பெற்றிடுவாய்
சோம்பிக் கிடக்கவே லீவென்று
தப்பாய் நீயும் நினைக்காதே

அறிவுடன் நுட்பம் பயிலுதலும்
ஆர்வமாய் கற்றதைக் கடைப்பிடித்தும்
சீரான மனப்பாங்கை உருவாக்கி
சிறப்பாய் நீயும் வாழ்ந்திடனும்


- திருமதி.சி.இரவீந்திரன


மேலே



வேற்றுமையில் ஒற்றுமை

கிறிஸ்தவர் வணங்கும் தேவாலயம்
சைவர்கள் வணங்குவ தாலயமாம்
முஸ்லீம்கள் தொழுவது பள்ளிவாசல்
எல்லோரும் நாடுவ திறைவனையே

அட்டாங்க நமஸ்காரம் ஒருசாரார்
முழந்தாளிடுவார் மறுசாரார்
வீழ்ந்து வணங்குவார் ஒருசாரார்
தாளினை வணங்குதல் நோக்கமன்றோ

பிக்கு சொல்லுவார் தம்ம பதம்
போதகா; வாசிப்பர் பைபிள் தனை
குருக்கள் கூறவது சுலோகம்தனை
அனைத்தும் சொல்வது அன்பினையே

யேசு காட்டுவது அன்புவழி
புத்தா; சொல்வது அன்புவழி
அன்பே சிவமெனும் சைவ வழி
வேற்றுமையுண்டோ சொல்லிடுவீர்

மதத்தைக் காட்டி மனிதருமே
பேதத்தை வளர்ப்பது பிழையன்றோ
வேண்டாம் எமக்குள் வேற்றுமையே
உயரும் வழிகாட்டும் ஒற்றுமையே

 

- திருமதி.சி.இரவீந்திரன்
கோப்பாய

 


மேலே