29.4.2009 கொடைக்கானல் அருளுரை

 

எல்லாம் ஒன்றே என்னும் தத்துவத்தினை உணருங்கள்


படைப்பு சத்தியத்திலிருந்து பிறந்து பின்னர் அத்துடனேயே ஒன்றுகிறது. பிரபஞ்சத்தில் சத்தியம் இல்லாத இடம் ஏதாவது உண்டா? இந்த பரிசுத்த> மாசற்ற சத்தியத்தை மனக்கண்ணில் நிறுத்துங்கள். (தெலுங்கு கவிதை)


இறை நம்பிக்கை இழந்தால் இறைவனையே இழப்பீர்கள்.


அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் அனைவரும் ஆசைப்படுகின்றனர். எவரும் கஷ்டங்கள், துன்பங்கள் முதலியவற்றைத் தேடுவதில்லை பொப்பட் எனக்கு முன்னால் பேசும் போதும் ~எல்லோரும் மனித உருவில் வந்த இறைவனே" என்றார். இறைவன் ஒருவனே இரண்டாவது ஒன்றுமில்லை. இன்னும் ஒன்ற இருப்பதாக எண்ணினீர்களானால் அது அசத்தியம். ஆகவே, இரண்டாவதாக ஒன்றுமேயில்லை.  எல்லாமே ஒன்று சிறிய எலும்புகள், கொசுக்கள், பறவைகள், பெரிய யானைகள் எல்லாம் இறைவனின் வெளிப்பாடுகளே. மரங்கள், குன்றுகள், மலைகள் அனைத்துமே இறைவனின் வெளிப்பாடுகளே. அப்படியிருக்க எவ்வாறு இரண்டாவது ஒன்று என்று இருக்க முடியும்.? இரண்டாவது ஒன்று இருப்பதாக நீங்கள் நினைப்பது உங்கள் கற்பனையே, மாயையே, நீங்களாகத் தீர்மானித்தது தான் அது. எங்கிருந்து உங்கள் உடல் வந்ததென நினைத்துப் பாருங்கள். உங்கள் பெற்றோரிடமிருந்து வந்ததென்கிறீர்கள். இல்லை... இல்லை. நீங்கள் உங்கள் பெற்றோர்களிடமிருந்து வரவில்லை. உங்களிடமிருந்தே வந்தீர்கள். ஒன்றே ஒன்று தானிருக்கும் போது இரண்டாவது எங்குள்ளது? ஆனால் இன்று, ஜனங்கள் பலவற்றையே தான் நம்புகின்றனர். ஒற்றுமையை அல்ல. ஒற்றுமை என்றால் என்ன? பலவற்றின் சேர்க்கை அல்ல. அது எல்லாம் ஒன்றே என்று உணர்தல். உங்களைச் சுற்றிக் கண்ணாடிகள் இருப்பின், உங்களுடைய பல பிரதி பிம்பங்களைப் பார்ப்பீர்கள். இவை எல்லாம் உங்களின் உருவங்களே ஆனால் இது உண்மை அல்ல. கேள்வி கேட்பவரும் பதில் சொல்பவரும் ஒருவரே. எல்லாரும் ஒன்றே. ''தெய்வம் மானுஷரூபபேண" (இறைவன் மனித ரூபத்தில் இருக்கிறான்.) ஒரே ஒருவர் பல உருவங்களாகத் தோற்றமளிக்கிறார். இவற்றை வெவ்வேறு வித்தியாசமான உருவங்கள் எனக் கருதுவது தவறு.


நான் மைக்கில் பேசும் போது நீங்கள் என் குரலைக் கேட்கிறீர்கள் பேசுபவர் ஒருவரே. ஒரே குரலை பல காதுகளில் கேட்கின்றது. "ஏகோஹம் சர்வ பூதானம்" (சர்வ ஜீவராசிகளிலும் உள்ள ஒரே உண்மைத் தத்துவம் நானே) "ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி" (சத்தியம் ஒன்றே. ஞானிகள் அதை பல பெயர் கொண்டு அழைக்கின்றனர்.)


வானத்தில், ஒரே ஒரு சூரியன் தான் உள்ளது. ஆனால் அதன் பிரதிபிம்பங்களை, பல ஆறுகள், குளங்கள், பாத்திரங்கள் முதலியவற்றில் உள்ள நீரில் காணலாம். சூரியன் ஒன்றே தான். எங்கெல்லாம் நீர் இருக்கிறதோ அங்கெல்லாம் அது பிரதிபலிக்கிறது. ஒரு தட்டில் நீரை ஊற்றி வையுங்கள், அந்த நீரில் கூட சூரியன் பிரதிபலிப்பதை நீங்கள் காணலாம். அப்படியென்றால் சூரியன் அந்த நீரில் உள்ளதா? இல்லை. இல்லை. அது சூரியனின் பிரதிபலிப்பே. அதே விதமாக ஆத்மா என்பது ஒன்றுதான். மனம், புத்தி, சித்தம், அகம்பாவம், எல்லாம். வித்தியாசமான பாத்திரங்கள் போன்றவை. ஆகவே தெய்வீகம் ஒன்றுதான். து}ய இதயத்தில் இறைவனைக்காண இயலும். எல்லாம் இறைவன் தான். நீங்கள் வேறு விதமாக சித்தரித்தீர்களானால். அது உங்கள் மாயையே, சூரியன் வானத்தின் மேலிருந்தால் எல்லா ஏரிகள், குளங்கள் முதலியவற்றில் அதன் பிரதிபலிப்பைப் பார்க்கலாம். அழுக்கான நீரிலும். அதைப் பார்க்க முடியும். ஆனால் முழுக்க, முழுக்க அழுக்கான நீரில் அதைப் பார்க்க முடியாது. அதே விதமாக உங்கள் இதயமானது பரிசுத்தமாக, தெளிவாக இருப்பின் இறைவனின் நேர் வெளிப்பாட்டினை இதயத்திலேயே பர்க்க முடியும். ஆனால் உங்கள் இதயம் மாசடைந்து, அழுக்காகி உள்ளது. உங்கள் இதயத்தை நன்றாக சுத்தமாக்கி புனிதமாக்கினால் நிச்சயமாக இறைவனை அதனில் காண இயலும். எல்லாரிடமும் இறைவன் உள்ளுறைகிறார். இப்போதே பிறந்த குழந்தையிலிருந்து வளர்ந்து வயதானவர் வரையில் இறைவன் அனைவருள்ளும் இருக்கிறார். ஒரு சிறு குழந்தை வளர்ந்து, காலம் செல்லச் செல்ல வயதானவராகி விடுகிறது. அந்த சிறு குழந்தை பெண்மணி, கிழவி எல்லாரும் ஒருவரே. மனதில் தோன்றும் எண்ணங்களினால் மனிர்கள் பலவித்தியாசமான உருவங்களைப் பார்க்கின்றனர். ஆனால், இறைவனுக்குப் பல உருவங்கள் இல்லை. உண்மையைச் சொல்லப் போனால், அவருக்கு உருவமே இல்லை. அப்படியிருப்பினும், அவருக்கு பல நாமங்கள் உண்டு. இறைவனுக்குப் பல்வேறு நாமங்கள் இருப்பினும் அவை யெல்லாம். ஒரு இறைவனின் பல பிரதி பிம்பங்களுக்கேற்றவாறு அமைகின்றன. சூரியனின் பிரதிபிம்பத்தை ஓடும் நீரிலும் தேங்கி நிற்கும் நீரிலும் காணலாம். ஓடும் நீரில் பிரதிபிம்பமானது அசைவதாகத் தோன்றும். ஆனால் நிச்சலனமான நீரில் பிரதிபிம்பமும் நிச்சலனமாகவிருக்கும். உலகத்தின் மேல் நீங்கள் பற்றுதல் வைப்பதற்குக் காரணம் உங்கள் மாயையே. இந்த உலகத்தில் உள்ள எல்லாமே மனதின் வெளிப்பாடுகளே.


ஹிரண்யகசிபு தன் மகன் பிரஹலாதனைப் பார்த்து "இறைவன் எங்குள்ளான்? நீ எப்பொழுதும் நாராயணா, நாராயணா என்று ஜபித்துக் கொண்டிருக்கிறாயே, அந்த நாராயணன் எங்கிருக்கிறான்.?" என்று கேட்டான். அதற்கு பிரகலாதன் "மனிதனே நாராயணன், நீங்கள் எங்கு நோக்கினாலும், பார்க்குமிடமெல்லாம் நாராயணனேயே காண்கிறீர்கள். அவர் என்னுள் இருக்கிறார். உங்களினுள் இருக்கிறார். எல்லாரினுள்ளும் இருக்கிறார்." என்று பதிலுரைத்தான். 

 

"இந்தத் து}ணிலுமிருக்கிறாரா?" என்று ஹிரண்ய கசிபு வினவினான். "நிச்சயமாக அவர் அதிலுமிருக்கிறார்," என்று பதில் கூறினான். அப்போது ஹிரண்ய கசிபு ஒரு கதையை எடுத்து து}ணை அடித்தான். உடனே, அந்தத் து}ணிலிருந்து வெளிப்பட்ட விஷ்ணுபகவானை அவன் கண்ணுற்றான், ஆகவே, நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு இறைவன் இருக்கிறார். ஆனால், ஹிரண்யகசிபு போன்றவர்களுக்கு இறை நம்பிக்கை கிடையாது.


உங்கள் பார்வையை ஒற்றுமையைக் காணப்பழக்குங்கள்: படைப்பில் முழுக்க, முழுக்க ஒற்றுமையே இருந்தாலும், நாம் அதனை பலவற்றின் கோணத்திலிருந்து பார்க்கிறோம்." அவர் என் தந்தை, அவர் என் தாய்,அவள் என் அக்கா,அவள் என் தங்கை" என்று கூறுகிறோம். நாம் உருவங்களுடனான உறவுகளை வளர்க்கிறோம். இந்த உறவுகள் எல்லாம் எங்கிருந்து வந்தன? ஒற்றுமை என்று கோட்பாடில்லாது ஒன்றும் இருக்க முடியாது.


இதோ ஒரு உதாரணம். ஒரு அறையில் எங்கும் கண்ணாடிகள் பதிந்திருந்தன. அந்த அறையினுள் ஒரு நாய் புகுந்து, பல நாய்களை அந்தக் கண்ணாடிகளில் கண்டது. அத்தனை நாய்கள் ஒரே சமயத்தில், தன்னைச் சுற்றியிருப்பதைப் பார்த்து தன்னுயிருக்கு ஆபத்தென எண்ணி பயந்தது. இத்தகைய சந்தர்ப்பத்திலிருந்து தப்பிக்க ஒரு கண்ணாடியில் தொpந்த தன்னுருவத்தை இன்னொரு நாயென எண்ணி அதன் மீது பாய்வதைக் கண்ணுற்றது. கண்ணாடி மேல் குதித்ததால் அது உடைந்தது அப்போது தான், அந்த அறையில் வேறு நாய் ஒன்றுமில்லை என உணர்ந்து அந்த அறையை விட்டு வெளியேறியது. அத்தனை நாய்களிலிருந்து தப்பித்து வந்ததை எண்ணி பெருமூச்சு விட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டது. ஆனால் உண்மையில் அத்தனை நாய்கள் இருந்தனவா? அது தன்னுருவத்தையே பல, பல கண்ணாடிகளில் கண்டது.


தற்காலத்தைய மனிதர்களின் நிலையும் அதுவே தான். இந்த உலகமென்னும் கண்ணாடியில் காணும் பிரதிபிம்பங்களே, தான் காணும் மற்றவர்களெல்லாம் என்று தெரிந்தால், ஒற்றுமைக் கோட்பாட்டை உணர்வான். ஆகவே தனித்தனியாக, தந்தை, தாய், சகோதரன், சகோதரி என்ற வேறுபட்டவர்கள் இல்லை. ஆயினும், ஒவ்வொருவரும் உலகில் பல உறவு முறைகளை மாயையின் காரணமாக ஏற்படுத்திக் கொண்டு, 'இது என் சகோதரி, அது என் சகோதரன், இவர் என் தந்தை, அவர் என் தாய்" என்று கூறிக் கொள்கின்றனர். இந்த உறவுகளெல்லாம், உங்கள் தெய்வீக உண்மைத் தன்மையுடன் சம்பந்தப்பட்டவை அல்ல. அவை எல்லாம், லெளகீக, உடல் சம்பந்தப்பட்ட உறவுகளே. அதே ஆத்மா தான் அனைவரினுள்ளும் இருக்கிறது, என்பதைப் பரிந்து கொள்ள முயலுங்கள். ஆத்ம தத்துவத்தை மறந்து நீங்கள் உலகாயுத உறவுகளை வளர்க்கிறீர்கள்.

 
'அவள் என் மனைவி" என்று கூறுகிறீர்கள். ஆனால், கல்யாணத்திற்கு முன் அவள் வேறு, நீங்கள் வேறு. கல்யாணத்திற்கப்புறம் தான், நீங்கள் ' என் மனைவி, என் மனைவி" என்கிறீர்கள். இந்தக் கணவன் மனைவி உறவை எவ்வாறு வளர்த்தீர்கள்? உங்கள் மாயைனாலேயே. மாயையினால் தான் ஒருவன் பல தவறுகளைப் புரிகிறான். விரும்பத்தாக பல செயல்களில் ஈடுபடுகிறான்.  எங்கு பார்ப்பினும் அங்கு இறைவன் இருக்கிறார். அந்த இறைவன் ஒருவரே. மனிதர்கள், 'அவர் இராமர், அவர் கிருஷ்ணர், இவர் சிவன், இவர் விஷ்ணு" என்று கூறுகின்றனர். அதன் அர்த்தமென்ன? விஷ்ணு, சிவன், இராமர், கிருஸ்ணர் எல்லாம் தனித்தனியானவரென அர்த்தமா? ஒரே இறைவனின் பல பெயர்களே இவை. உங்கள் கற்பனையின் காரணமாக, கடவுள் உங்கள் முன் ஒரு தனிப்பட்ட உருவத்தில் தோன்றுகிறார். ரவிவர்மா போன்ற ஓவியர்கள் வரைந்த படங்களில் உள்ள கிருஷ்ணரை உங்கள் மனதில் நிறுத்தி சிந்தனை செய்தால் இறைவன் கிருஷ்ணர் உருவில் உங்கள் முன் தோன்றுவார். அதே போன்று இராமர் உருவில் இறைவன் தோன்றுவார். ஆனால் இறைவன் இராமருமல்ல, கிருஷ்ணருமல்ல. இராமர், கிருஷ்ணர் எல்லாரும் நீங்களே. இராமர், கிருஷ்ணரின் உங்கள் உங்களின் பிரதிபிம்பங்களே தவிர வேறல்ல. நீங்கள் 'எனக்கு இராமர் வேண்டும்" என்று கூறும் போது இறைவன் இராமரின் உருவத்தில் வெளிப்டுகிறார். அதே ரூபத்தில் வெளிப்படுகிறார். இவையெல்லாம் உங்களின் பிரதிபிம்பங்களே தவிரவேறல்ல. உங்கள் ஆசைகளின் சுமையைக் குறைத்து விடுங்கள்.


உலகில் இன்ப துன்பம் இரண்டும் உள்ளது. உங்களுக்கு ஏதாவது கஷ்டம் நேர்ந்தால்? 'ஐயோ கடவுள் ஏன் இந்தக் கஷ்டத்தை எனக்குக் கொடுத்திருக் கிறார்? நான் என்ன பாவம் செய்தேன்? என்று புலம்புகிறீர்கள். அப்படியல்லாது, நீங்கள் செல்வம் சம்பாதித்து, சந்தோசமாக இருந்தீர்களென்றால்? இது என்னுடைய நல்லதிர்ஷ்டம்." என்கிறீர்கள். இது உங்கள் நல்லதிர்ஷமுமில்லை அது உங்கள் கெட்ட அதிர்ஷடமுமில்லை. நல்ல எண்ணங்களி இருந்தால் நல்ல பலன்கள் ஏற்படும். அப்படியில்லாது கெட்ட எண்ணங்களிருந்தால் கெட்டபலன்களே கிடைக்கும். நல்லது, கெட்டது என்பது வெளியிலிருந்து வருவதல்ல.எல்லாமே இறைவன் தான், ஒரு தேளைப் பார்த்தவுடன் ஜனங்கள் அது கொட்டிவிடுமோ எனப் பயப்படுகின்றனர். ஆனால் உண்மையில் தேளில் கூட இறைவனிருக்கிறான். ஒரு ஜீவராசியில் கூட இறைவன் உள்ளுறையாமல் இருப்பதில்லை. எப்படியிருப்பினும் நீங்கள் உங்கள் மாயையினை விட்டொழிக்க வேண்டும். மனிதர்களிடம் ஆசைகள் மிக அதிகமாகவுள்ளன. இந்த அதிக ஆசைகள் தான் மாயைக்குக் காரணம். அதனால், ஆசைகளைக் குறைக்க வேண்டும். எப்படி அதனைச் செய்யலாம்? மனம் கட்டுக்கடங்காது தன் இஷ்டப்படி நடக்கிறது. எல்லா ஆசைகளும் மனதின் படைப்புகளே. 'மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்தமோக் ஷயோ" (மனிதன் தளைப்படுவதற்கும் வீடு பேறு அடைவதற்கும் மனதே காரணம்) வீடு பேறு அடையும் வழியிலே செல்ல நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மாயை உங்களை ஏமாற்ற வழி இருக்கிறது.


மனிதர்கள் ஆசைகள் நிரம்பி உள்ளனர், மனமே ஆசைகளுக்குக் காரணம். ஆகவே முதல் முக்கியமாக மனதைக் கட்டுப் படுத்துங்கள். அப்படி நீங்கள் செய்தால், ஒரு ஆசைகூட உங்களை அண்டாது. அதனால் தான் 'சுமையைக் குறைத்தால் செளகரியம் கூடும். பிரயாணம் இன்பகரமானதாகவிருக்கும்." என்று கூறுவார்கள். (
less luggage more comfort, makes travel a pleasure) உங்கள் ஆசைகள் என்ற சுமையைக் குறைத்தீர்களாயின் இறைவனுக்கு உங்கள் மேல் பிரியமுண்டாகும், மேலும் ஆசைகள் ஏற்படின் வாழ்வே பெருஞ்சுமையாகும். குறைந்த ஆசைகளுடன் நீங்கள் அதிக மகிழ்வுடன் இருக்கலாம்.


கல்யாணம் செய்வதற்கு முன்னால் 'நான் வைத்திருப்பதை வைத்து வாழ்க்கை நடத்தி விடலாம். சில சமயம் பட்டினியாயிருந்தாலும் கவலை இல்லை" என்று ஒருவன் நினைப்பான். ஆனால் கல்யாணமாகி, குழந்தைகளும் வந்து விட்டால் எத்தனையோ கவலைகள் அவனை அரித்தெடுக்கும். மனைவி, மக்கள் எங்கிருந்து வந்தனர்? நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அவர்களும் அங்கிருந்தே வந்தனர். பற்றுதலை வளர்த்தால் ஒருத்தியை உங்கள் மனைவி என்று எண்ணுகிறீர்கள். எல்லாப் பெண்களையும் உங்கள் மனைவியென அழைக்க முடியுமா? அப்படிச் சொன்னால் அடிதான வாங்குவீர்கள். அப்படிப் பேசுவது தவறு. அவ்வாறு பேசக் கூடாது. மனைவி, கணவன் இடையே உள்ள உறவு உடல் ரீதியான உறவு முறைதான். இந்த உடல் சம்பந்தமான உறவு முறையே பல இன்னல்களுக்குக் காரணமாகிறது.


செல்வம் மிகுந்தவன் செல்வந்தன் என அழைக்கப்படுகிறான். அதே மனிதன் தன் பணத்தை இழந்து விட்டானாகில் பிச்சைக்காரனென கருதப்படுவான். பணமிருக்கும் வரையில் உயர்ந்தவராக மதிக்கப்படுவீர்கள். ஏழையாகிவிட்டால் பிச்சைக் காரனென எள்ளி நகையாடுவார்கள். ஆகவே, ஒரே மனிதன் உயர்ந்தவனாகவும்> தாழ்ந்தவனாகவும் வெவ்வேறு சமயங்களில் கருதப்படுகிறான். சரிசமமாகக் கருதும் சமபாவத்தினை வளர்த்துக் கொண்டீர்களானால் எல்லாம் உங்களுக்கு நல்லதாகவே முடியும். யாராவது உங்களை அடித்தால்க்கூட 'என்னை அடிப்பவர் கடவுளே. என்னிடம் ஏதோ குறை இருப்பதால்தான் கடவுள் அடிக்கிறார். இந்த உடல் ஏதோ தவறிழைத்திருக்கிறது. ஆகவே, அது தண்டனை பெற வேண்டும்." என்று அதனை வரவேற்றிடுங்கள்.


நாம் எது செய்தாலும், அது நம்மிடம் எதிர் செயல், பிரதிபிம்பம், எதிரொலி எனத்திரும்பி விடும். நாம் அனுபவிப்பதெல்லாம் நமது செயல்களின் பிரதிபலனே, அது இறைவனால் கொடுக்கப்படுவதில்லை. இறைவன் மனிதனுக்கு ஆனந்தம் தவிர வேறெதுவும் அளிப்பதில்லை. ஆனந்தத்தை அனுபவித்த பின்னர் அதை அளித்தவரைக் குறை கூறி விமர்சிக்காதீர்கள். உங்கள் செயல்களின் பிரதிபலிப்பே உங்கள் சந்தோஷமும் துக்கமும் இறைவன் உங்களிடம் அன்பு செலுத்துகி றாரெனில் அவர் தன்னிடமே அன்பு கொள்வதாக அர்த்தம்.


இறைவனுக்கு குணங்கள் இல்லை. அவரிடம் தீய குணங்களான கோபம், வெறுப்பு, பொறாமை, பாசாங்கு போன்றவை கிடையாது. இத்தகு தீய குணங்களை அவர் உங்களுக்கு அனிப்பதும் கிடையாது. இவையெல்லாம் நீங்களே வரவழைத்துக் கொள்வதுதான். ஆகையால், உங்கள் மாயையை விட்டு விடுங்கள். 'என்னிடம் இது கிடையாது. என்னிடம் அது கிடையாது" என்று நினைத்து, தேவையில்லாத கவலைகளை வளர்த்தால், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். உங்களது ஆசைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். அப்போது உங்களுக்கு அதிக சுமைகளைத் து}க்கும் அவசியமிருக்காது. அப்போது தான் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்.
ஆத்ம தத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்: உங்களுக்கு உண்மையில் இறைவன் மீது அன்பு இருக்குமாயின் அவரை எப்போதும் சிந்தையில் நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு இராமர் மீது அன்பு இருக்குமாயின் அவரை விடாது சிந்தனை செய்யுங்கள் உங்கள் இஷ்ட தெய்வமும் கிருஸ்ணராயின் அவரை சிந்தியுங்கள். ஆனால் எப்போதும் ஞாபகம் வைத்திருக்க வேண்டியது என்னவென்றால் இராமரும் கிருஸ்ணரும் எங்கோ வெளியில் இல்லை. இராமர் உங்கள் இதயத்தல் இருக்கிறார். கிருஷ்ணரும் உங்கள் இதயத்தில் இருக்கிறார். எந்த உருவத்தை இராமரென எண்ணுகி றீர்களோ அந்த உருவத்தை உங்கள் கண்களை மூடிக்கொண்டு, சிந்தனையில் நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயமாக அப்பொழுது அந்த உருவத்தை மனக் கண்ணின் முன் காண்பீர்கள். முடிவாக நான் மாயையின் காரணமாக இராமரை, கிருஷ்ணரை என்னிலிருந்து வேறானவராக எண்ணினேன். உண்மையில் நானே இராமர், நானே கிருஷ்ணர். என்று உணர்வீர்கள்.


நீங்கள் இராமரை சிந்திக்கும் போது அந்த உருவத்தை உங்கள் எண்ணங்களின் பிரதிபிம்பமாகக் காண்பீர்கள். அதே போன்று கிருஷ்ணரை எண்ணும் போது அவருடைய உருவத்தைக் காண்பீர்கள். இராமர், கிருஸ்ணர் ஆகியவர்கள் உங்களிலிருந்து வேறுபட்டவர்களாகக் கருதுவதற்குக் காரணம் உங்கள் மாயையே. யார் இராமரை பார்த்திருக்கிறீர்கள்? யார் கிருஸ்ணரைப் பார்த்திருக் கிறீர்கள்? புனித நூல்களில் கொடுத்திருக்கும் வர்ணனை அடிப்படையில் ஓவியர்கள் இராமரை, கிருஷ்ணரை ஓவியமாகத் தீட்டியுள்ளனர். இவையெல்லாம் வெறும் படங்களே: அவை உண்மையை வெளிப்படுத்துவதில்லை. எல்லாரும் அவர்களுக்குப் பிடித்த பெயர்களான இராமா, கிருஷ்ணா, கோவிந்தா போன்றவற்றால் அழைத்து> ஏதோ ஒரு நாமத்தை, உருவத்தை, சிந்திக்கலாம். அதிலொரு தவறுமில்லை. நான் இந்த வழக்கத்தை விட்டுவிடுமாறு கூறவில்லை. ஆனால் உங்களினுள் 'நான் தெய்வம். என் ஆத்மா தெய்வம்" என்றதில் பூரணமான, திடமான நம்பிக்கை இருக்க வேண்டும். ஆத்மாவுக்கு வடிவமில்லை. அதற்குப் பெயர் ஒன்றே உள்ளது. ஒவ்வொருவரி னுள்ளும் சூரியனைப் போல் ஆத்மாவானது ஒளிர்கிறது. து}யு இதயத்தில் தான் அதைக் காணமுடியும். மாசு படர்ந்த, அழுக்கடைந்த இதயத்தில் காண இயலாது.


பல அவதாரங்கள் இந்த உண்மையைப் பரப்ப வந்தனர். தெய்வீக அவதாரங்கள் தங்களுக்காக வருவதில்லை. அனைவருக்கும் சத்தியத்தைப் பற்றிய அறிவினைப் போதிக்கவே வருகின்றனர். அவர்களுடைய போதனைகளப் பின்பற்றி ஆத்ம தத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்.


வேதாந்தமாது 'ஆத்மா ஒன்றே உண்மையானது" என்று அறிவிக்கிறது. நீரின் மீது அலைகள் உண்டாகின்றன. நீரில்லாது அலைகள் ஏற்பட முடியாது. அதே போல ஆத்மாவில்லாது ஒரு உருவமும் இருக்க முடியாது. நீங்கள் ஆத்மாவை சிந்தனையில் நிறுத்தி 'ஓம் நமோ நாராயணா> ஓம் நமோ நாராயணா" என்ற மந்திரத்தையும் கூற முடியவில்லையெனில் 'ஓம்" என்று ஜபித்தால் போதுமானது. ஏனென்றால், எல்லாமே அதனுள் அடங்கியுள்ளது. பிரணவம் என்ற முழு முதல் சப்தத்தை 'ஓம்" குறிக்கிறது. உபநிஷதங்கள் அதையே ஆத்மாவென வர்ணிக்கின்றன. தைத்திரியோப நிஷத்தில் ஆத்ம தத்துவத்தைப் பற்றி மிக விபரமாக எழுதப்பட்டுள்ளது. இராமாயணம், பாகவதம், மஹாபாரதம், முதலியவை அவதாரங்களின் கதைகள் மூலம் அதே உண்மையை வெளிப்படுத்துகின்றன. எல்லாம் உங்களின் உள்ளே உள்ளது. எதுவும் வெளியில் இல்லை. படைப்பு முழுவதும் ஒன்றே நாமரூபங்களின் பின்னே அடங்கியுள்ள உண்மையைப் புரிந்து கொள்ள, உங்கள் மாயையை விட்டொழியுங்கள்.


பெயர், உருவம் ஆகியவை பிரிக்க முடியாதவை. சாய்ராம், சாய்ராம்.... என ஜபிக்கிறீர்கள். சாய்ராம் என்ற பெயர் எனக்குக் கொடுக்கப்பட்டது. நான் இந்தப் பெயருடன் பிறக்கவில்லை. இராமர், கிருஷ்ணர் என்று அவர்களுடைய பெற்றோர் அவர்களுக்குப் பெயர் சூட்டினர். அவர்களும் அந்தப் பெயருடன் பிறக்கவில்லை. இராமர் வந்து ''நான் இராமர்" என்று கூறினாரா? இல்லை, இல்லை. அவர் தசரதன் மகன். இராமர் என்று நாமகரணம் செய்யப்பட்டார்.  தசரதா என்ற பெயருக்கு என்ன அர்த்தம்? பத்து புலன்களுடன் கூடிய உடலெனும் ரதம் என்று அர்த்தமாகிறது. உங்கள் புலன்களை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். உங்கள் புலன்கள் மீது பூரணமாக கட்டுப்பாடு வைத்திருந்தால் வேறு எதற்கும் அவசியமில்லை. நீங்கள் உங்களை மறக்கக்கூட மறந்து விடுவீர்கள். உங்கள் புற உடலைக்கூட மறந்து விடுவீர்கள்.


புலன்களையும், உடலையும் கட்டுக்குள் மனம்தான் வைத்திருக்கிறது. உடலும் புலன்களும் நிரந்தரமற்றவை. மனம்கூட அழியக்கூடியது. நாம் 'மனம், மனம், மனம்" என்பது கூட மாயையே. இந்த வழிகளில் விசாரம் செய்து இறைவன் ஒருவரே என்பதனை உணர்ந்திடுங்கள். இது ஒன்றே சத்தியம். மீதி அனைத்தும் மாயையே. ஒரு சினிமாவில் திரை மீது பல காட்சிகளைப் பார்ப்பீர்கள். சீதை, இராமரின் திருமணம், இராவணன் சீதையை அபரித்துச் செல்வது. இராவணனுடன் இராமர் யுத்தம் புரிவது, இராமரின் நண்பர்கள் பலர் யுத்தத்தில் ஈடுபட்டிருப்பது என்றிவ்வாறு பல காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் அவையெல்லாம் வெறும் படங்களே. உண்மையில் நடக்கும் நிகழ்ச்சிகள் அல்ல.


எல்லோரும் ஒன்றே ' ஏகம் ஸத் விப்ரா பகுதா வதந்தி" (சத்தியம் ஒன்றே ஞானிகள் அதை பலவாறு விவரிக்கின்றனர்) சத்தியத்தைக் கடைப்பிடித்தால் தர்மம் அதிலிருந்து வெளிப்படும். சத்தியமும் தமமும் இணைந்திருந்தால் சாந்தி வந்தடையும். எங்கு அமைதி இருக்கிறதோ அங்கு ஆனந்தம் நடமாடும். நேர்மறை, எதிர்மறை சக்தி ஒன்று சேரும் போது ஒளி உண்டாகிறது.


அன்பு சாந்தியிலிருந்து பிறக்கும். எவறொருவரிடம் சாந்தி இல்லையோ அவரிடம் அன்பு குடியேறியிருக்கும் போது எல்லோரையும் நம்முடையவர்களாகக் கருதுவோம். எல்லாம் நமது உருவங்களே (
All are one : Be alike to every one) எல்லாரும் ஒன்றே. எல்லோருடனும் ஒரே மாதிரி இருங்கள். இந்த உண்மையை உணர முயற்சி செய்திடுங்கள்.


காய்ந்த சருகுகள் காற்றடிக்கும் போது பறந்து போகும். ஆனால், பச்சை இலைகள் அப்படியல்ல. அவை கிளைகளிலேயே இருக்கும். உங்கள் மனிதத் தனம் காற்றினால் அடித்துச் செல்லப்படும் காய்ந்த சருகு போலிருக்கக்கூடாது. எல்லாமே தெய்வீகப் புதிர்.


ராமரின் கதைகளெல்லாம் மிக அதிசயம். மூன்று உலகத்தோர் வாழ்வு இதனாலடைவது புனிதம் உலகத்தளையெனும் கொடிகளை வெட்டரிவாளென அறுக்கும் நல்ல நண்பன் போலத் தேவையின் போது உதவும் காட்டில் தவம் செய்யும் முனிவர், தீர்க்கதரிசிகளுக்குப் புகலிடம். (தெலுங்குக் கவிதை)


திடமான பக்தியை வளர்த்திடுங்கள்: உங்கள் மனதை, தனது பிரதிபிம்பத்தைப் பார்த்து ஏமாந்த நாய் போல் ஆக விடாதீர்கள். நாய் பல கண்ணாடிகளில் தெரிந்த பிரதி பிம்பங்களை பல நாய்களென எண்ணி ஏமாந்தது. நிறைய நாய்களிருக்கவில்லை. நாயில் கூட கடவுள் இருக்கிறார். அந்தப் புனித அதிர்வுகள் இல்லாது நாய் கூட உயிர்வாழ இயலாது. அது என்ன அதிர்வு? உயிர் தரும் அதிர்வு அது. அந்த வாழ்க்கைப் கோட்பாட்டினால் நாய் உண்டு, அங்குமிங்கும் போய் வருகிறது. 'அவன் வெளி ஆள், அவன் பணக்காரன், அவன் பிச்சைக்காரன்" என்பது போன்ற வேறுபாடுகளைப் பாராட்டாதீர்கள், எல்லோரும் ஒன்றே. எல்லாவற்றிலும் ஒற்றுமையைக் காணுங்கள். அப்போதுதான் உங்களிடம் சீரான, உண்மையான பக்தி இருக்கும். இல்லாவிட்டால் ஆட்டங்கண்டு விடும். கணத்திற்குக் கணம் பக்தியானது தடுமாறும், நிறையப் பெர் தங்களைப் பக்தரெனக் கூறிக் கொள்கிறார்கள். அவர்கள் கடவுள் நம்பிக்கை இருக்கும் வரை அவர்களின் பக்தி உறுதியாக இருக்கும். அவர்களின் பக்தி சலனப்படும் போது மனமும் சஞ்சலப்படுகிறது. எப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலும் கூட உண்மையாக பக்தி ஆட்டம் காணாது. உங்களை துண்டு துண்டாக வெட்டினாலும் எதுதான நடந்தாலும், பக்தி தடுமாறக்கூடாது. அது தடுமாறாத, சீரான, மாசற்ற பக்தி, அப்படிப்பட்ட, உறுதியான, சுயநலமற்ற பக்தியை வளர்;த்துக் கொள்ளுங்கள். அதுவே யேசுவின் போதனையாகும். இறைவன் ஒருவரே. அகங்காரத்தை வெட்டி அவரை அடையலாம். அதுவே சிலுவை அடையாளத்தின் உள்ளார்த்தம்.


உங்கள் நம்பிக்கையை எப்போதும் இழக்காதீர்கள். அதை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். உங்கள் உண்மையான தன்மையை நீங்கள் அப்போது உணர்வீர்கள். மனிதன் பிறந்தது மனிதத் தன்மையை நிலைப்படுத்துவதற்கே. அதை அழிப்பதற்கல்ல. மனிதப் பண்புகளான சத்தியம், தர்மம், சாந்தி, ப்ரேமை, அஹிம்சையை வளர்த்துக் கொள்ளுங்கள். சத்தியம் தர்மத்துடன் சேரும் போது சாந்த, பிரேமை பிறக்கின்றன. அன்பே எல்லோரையும் ஒன்று சேர்ப்பது. கோபம் வந்தால் நீங்கள உங்கள் மகனைக் கொல்வீர்களா? இல்லை, இல்லை நீங்கள் அவனைத் திட்டுவீர்கள். ஆனால் அவனுக்கு தீங்கிழைக்க மாட்டீர்கள். அதே போன்று, அன்பு இருக்கும் எல்லோரையும் உங்களுடையவராக நடத்துவீர்கள், எல்லா மாதர்களையும் உங்கள் தாயாக, சகோதரியாக கருதுங்கள்.


இந்தப் புனித பாரத நாட்டில் சகிப்புத் தன்மைதான் புனிதமான அழகு. எல்லாச் சடங்குகளிலும் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதே பெரிய தவம். இந்த நாட்டில் அமிர்தமான உணர்வென்பது அன்னையிடம் செலுத்தும் அன்பே. (தெலுங்கு கவிதை)
அப்படிப்பட்ட புனித உணர்வுகளை எல்லா மாதர்களிடமும் வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும் போது தான் அவளை மனைவி என்று அழைப்பீர்கள். மீதிப்படி எல்லாப் பெண்களும் உங்கள் தாயும், சகோதரியுமாவார். அதே போல, எல்லா ஆண்களும் உங்கள் சகோதரரே. இறைவன் ஒருவரே. அவர் மட்டுமே ஒரு புருஷர் (ஆண்) அவரைத் தவிர வேறு புருஷர்கள் இல்லை.


ஒரு தடவை, கோபிகைகள் கிருஸ்ணரை சந்திப்பதற்காக அவருடைய மாளிகைக்கு வந்தனர். அவர்கள் உள்ளே நுழைய யத்தனித்த போது அவர்களை வாயிற்காப்போன் தடுத்தான். அவர்கள் பெண்கள் என்ற காரணத்தைக் காட்டித் தடுத்தான். 'நீ மட்டும் எப்படி அங்கே இருக்கிறாய் என்று கோபிகைகள் அவனிடம் வினாவினர்கள். 'நான் ஒரு ஆண் என்பதால்" என்று பதிலளித்தான். கோபிகைகள் அவனிடம் 'நீ ஆண்களின் உடையை அணிவதால் மட்டும் ஆண் என்று கூறிக்கொள்ள முடியாது. பஞ்ச பூதங்களும் பஞ்ச பிராணன்களும் எங்களிடம் இருப்பது போலவே உன்னிடமும் உள்ளது. ஆணுடையை நீ அணிந்தாலும், நாம் பெண் ஆடையில் இருந்தாலும் நாம் வேறுபட்டவர் அல்லர். அதே தெய்வீகம் உன்னிடமும் எங்களிடமும் உள்ளது. உண்மையில் கிருஸ்ணர் ஒருவரே புருஷர். மீதி அனைவரும் பெண்களே" என்று அறிவுறுத்தினார்.


இறைவனிடம் அன்பு செலுத்துவதே வாழ்க்கையின் முக்கிய இலக்கு இன்று அந்த சமத்துவமும் ஒற்றுமையும் உலகில் மறைந்து விட்டன. ஒற்றுமை இல்லாததால் தெய்வீகத்தைப் பார்க்க இயலாது இருக்கிறோம். அதன் காரணமாக, வெறுப்பு வளர்ந்து கொண்டே போகிறது. அன்பில்லாத காரணத்தால் இன்று உலகத்தில் வேற்றுமைகள் பல்கிப் பெருகி சண்டைகள் அதிகரித்துள்ளன. மனிதன் தன் மனிதத் தன்மையைக்கூட மறந்து விட்டான். முதலில் நீங்கள் தெய்வீகமானவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 'நான் ஒரு மனிதன். அவர் இறைவன்." என்று கூறும் போது துவைதம் தலைது}க்குகிறது. இரண்டு வந்து விட்டால், பின் தொடர்ந்து> மூன்றாவது வந்து விடும். அதுவே மனம் என்பது. அது உங்களை முழுவதுமாக நாசமடித்து விடும்.


கணவன் கணவனாக நடத்தப்பட வேண்டும். மனைவி மனைவியாக நடத்தப்பட வேண்டும். இருவரும் தம் தம் கடமைகளை செய்திட வேண்டும். ஆங்கிலத்தில் கடமை (
Duty) என்றால் ஒரு தனிப்பட்ட வேலையைக் குறிக்கும். மனிதனுடைய கடமை என்பது ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வது மட்டுமல்ல. கடமை என்றால் 'நிஷ்காமகர்மா" (தன்னலமற்ற வேலை) வினையை குறிக்கும்.

 

ஒரு சுயநலவாதி மீனைவிடக் கேவலமானவன். (Fish better than selfish) மீன் சுயநலத்திலும் மேலானது. ஆகையால் ஒரு போதும் சுயநலத்திற்கு இடம் கொடாதீர்கள். சுயநலத்தை விட்டால் தான் ஆத்மா என்னும் உண்மையான உங்களை உணர முடியும். உங்கள் புலன்களுக்கு அடிமையாகி விட்டால் நீங்கள் எப்போதும் சுயநலமாகவே இருப்பீர்கள். அதனால் சுயநலத்தை விட்டொழியுங்கள். எல்லாருக்கும் உதவிடுங்கள்.


ராமநவமியன்று நான் கூறியவாறு, இறைவன் ஒருவரே. உலகின் வெளித் தோற்றத்தில் பலவகைகள் உள்ளன. உண்மையில் மனிதனானவன் கடவுளே. இந்த சத்தியத்தில் நம்பிக்கை வைத்திடுங்கள். ஒரு சிறிது கூட உங்கள் நம்பிக்கை ஆட்டம் காணக்கூடாது. நீங்கள் நம்பிக்கையை இழந்தால் இறைவனையே இழப்பீர்கள். என்னதான் உங்களுக்கு ஏற்பட்டாலும் ஒரு போதும் சுயநலமாக மாறாதீர்கள். அப்போது உங்கள் தெய்வீகத்தை உணர்வீர்கள். அப்போது இராமர், கிருஸ்ணர், ஈஸ்வரர், விஸ்ணு எல்லோரும் வேறுபட்டவர்கள் என்ற மாயை இருக்காது.


இராமர், கிருஸ்ணர் என்ற பெயர்கள் எங்களால் கொடுக்கப்பட்டவை. பார்க்கப் போனால் எல்லாப் பெயர்களும் எங்களால் கொடுக்கப்பட்டவையே. எல்லோரும் இறைவனிடமிருந்து பிறந்தவர்கள் தான். இறைவன் ஒருவரே இருவரல்ல. இன்றிலிருந்து வேறுபாடுகளைக்களைய முற்படுங்கள். இறைவனிடம் அன்பு செலுத்தும் போது வழிபட்டு, அவரைப் பின்பற்றுங்கள். அதுதான் முக்கியமான இலக்கும் உங்கள் வாழ்வின் உண்மையான காரணமுமே
 

(சாய்சுருதி கொடைக்கானல் - 29.4.2009 அருளுரை)